ஜனக்க ரத்நாயக்கவின் அலுவலகத்திலிருந்த கோப்புகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னநாயக்கவின் அலுவலகத்தில் இருந்த 28 கோப்புகள் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கமைய, கடந்த 16 ஆம் திகதி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்கவின் அலுவலகம் முத்திரையிட்டு பூட்டப்பட்டது.
குறித்த அலுவலகத்தில் அரச எதிர்ப்பு செயற்பாடுகள் இடம்பெறுவதாக கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவல்களுக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அந்த தருணத்தில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் வெளிநாட்டுக்கு சென்றிருந்தார்.
இந்தநிலையில், நாடு திரும்பியுள்ள அவருடன் அலுவலகத்திற்கு சென்ற கொள்ளுப்பிட்டி பொலிஸார் அங்கிருந்த கோப்புகளைப் பொறுப்பேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












கருத்துக்களேதுமில்லை