அரச பணியாளர்களுக்கு 20,000 ரூபா விசேட கொடுப்பனவு வழங்குமாறு கோரிக்கை

அரச பணியாளர்களுக்கு 20 ஆயிரம் ரூபா விசேட கொடுப்பனவு வழங்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் அரச மற்றும் அரை அரச தொழிற்சங்கங்களின் கூட்டு ஒன்றியம் நடத்திய ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு அரசாங்கத்திடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

வாழ்க்கை செலவு அதிகரிப்பால் அரச சேவை பல பொதுவான பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும் சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் வரை விசேட கொடுப்பனவை வழங்குமாறும் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

அனைவரின் அடிப்படை வேண்டுகோள், 20 ஆயிரம் ரூபா விசேட உதவித்தொகை வேண்டும். சம்பளம் அதிகரிக்கப்படும் வரை அதனை வழங்க வேண்டும். எனவே, கூட்டுத் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டு பிரச்சினைக்குத் தீர்வைப் பெறப்போவதாகவும் வலியுறுத்தியுள்ளார்.

அரச ஊழியர்களின் மாதச்சம்பளம் வாழ்க்கை செலவுக்கு போதுமானதாக இல்லாத நிலையில், வங்கிகளில் பெற்றுக்கொள்ளப்பட்ட கடனுக்கான வட்டி உயர்த்தப்பட்டுள்ளதோடு பாரிய அளவில் வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

நாங்கள் அனைவரும் கூட்டாக இரண்டு அல்லது மூன்று பாரிய நடவடிக்கைகளை தெரிவு செய்துள்ளோம் என்பதையும், ரணில் ராஜபக்ஷ அரசாங்கத்துக்கும் ரணில் ராஜபக்ஷ அரசாங்கத்துக்காக குரைக்கும் நாய்களுக்கும் நாங்கள் நிச்சயமாக அந்த நடவடிக்கைகளுக்கு செல்வோம் என்பதையும் கூற விரும்புகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய வருமான வரிச்சட்டத்தை திருத்தக் கோரி, கடந்த முதலாம் திகதி நாடு முழுவதும் தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.