புத்தளத்தில் காட்டு யானை தாக்கி வயோதிபர் உயிரிழப்பு

புத்தளம் – கருவலகஸ்வெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரஜவிகம பிரதேசத்தில் நேற்று முன்தினம் (3) இரவு 8.30 மணியளவில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கருவலகஸ்வெவ ரஜவிகம பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய அதிகார முதியவன்சேலாகே உக்கு பண்டா என்பவரே உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் உயிரிழந்தவரது சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது என கருவலகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் கருவலகஸ்வெவ பொலிஸார் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.