கடன்மறுசீரமைப்பு மூலோபாயம் குறித்த அறிவிப்பு ஏப்பிரல் மாதத்தில் வெளியாகும்- மத்திய வங்கி ஆளுநர்

இலங்கை கடன்மறுசீரமைப்பு மூலோபாயத்தை ஏப்பிரல் மாதம் அறிவிக்கும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணயநிதியம் ஆறுமாத்திற்கான முழுமையான பிணையெடுக்கும் பொதி குறித்து ஆராய்வதற்கு முன்னர் இலங்கை ஏப்பிரல் மாதம் கடன்மறுசீரமைப்பு மூலோபாயத்தை அறிவிக்கும் வர்த்தக கடன்வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும் என மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

ரொய்ட்டருக்கு அவர் இதனை தெரிவித்துள்ளார்

நெருக்கடியில் சிக்குண்டுள்ள இலங்கை தனக்கு கடன்வழங்கிய இந்தியா சீனா உட்பட அனைத்து முக்கிய நாடுகளிடமிருந்தும் நிதி உத்தரவாதங்களை இதுவரை பெற்றுள்ளது.

இதன் காரணமாக சர்வதேச நாணயநிதியம் ஏப்பிரல் 20ம் திகதி இலங்கைக்கான நான்குவருட நிதிஉதவி திட்டத்திற்கு அனுமதி வழங்கவுள்ளது என சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது.

ஏழு தசாப்தகாலத்தில் இலங்கை சந்தித்துள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக அது மேற்கொண்ட பல மாத முயற்சிகளின் விளைவே சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவி

பணியாளர் மட்ட உடன்படிக்கை வெளியானவுடன் அதனை பார்த்தீர்கள் என்றால் அதில் கடன் மறுசீரமைப்பிற்கான எங்கள் அர்ப்பணிப்பு காணப்படும்,அதில் எங்களின் நடுத்தர கால இலக்குகளும் காணப்படும் என மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக நாங்கள் ஏப்பிரல் மாதத்தில் நீண்டகால நடுத்தர இலக்குகளை எப்படி அடையப்போகின்றோம் என்பதை அறிவிப்போம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.