சட்டவிரோதமாக வீடொன்றை உடைத்த குற்றச்சாட்டில் பெண் உட்பட இருவர் கைது!

சட்டவிரோதமாக உள் நுழைந்து வீடொன்றை உடைத்து தரைமட்டமாக்கிய குற்றச்சாட்டின் பேரில் பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் சாவகச்சேரி நகரில் நேற்று (11) இடம் பெற்றுள்ளது.

JCB இயந்திரத்தைப் பயன்படுத்தி குறித்த வீடு உடைக்கப்பட்டுள்ளது.

காணி உரிமைப் பிரச்சினையே சம்பவத்திற்கான காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகள் தெரிய வந்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டை உடைக்க பயன்படுத்திய JCB இயந்திரத்தையும் சந்தேக நபர்களையும் நீதிமன்றம் ஆஜர்ப்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.