கற்பிட்டிக்குளம் பகுதியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

மொறாவௌ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்பிட்டிக்குளம் பகுதியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் வில்கம்விகார பகுதியைச் சேர்ந்த 53 வயதான எம்.ஏ.விதானலகே ஹரிச்சந்திர என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்தச் சம்வம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மொறாவௌ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.