யானைகளின் பாதிப்பை கட்டுப்படுத்துவது தொடர்பில் இலங்கை அடிப்படைமனித உரிமைகள் அமைப்பினர் சம்மாந்துறை தவிசாளரை சந்தித்தனர்.
மாளிகைக்காடு நிருபர்
அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் விவசாய நடவடிக்கைகள் முடிவுற்று அறுவடை இடம்பெற்று வருவதனால் யானைகளின் தொல்லையும் அதிகரித்துள்ளது. வயல்களினூடாக ஊர்களை நோக்கி யானைகளின் வருகை உள்ளதனால் உயிர்பலிகளும் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.
யானைகளின் வருகை தொடர்பிலும், யானைகளின் மூலம் ஏற்படும் பாதிப்புக்களை கட்டுப்படுத்துவது தொடர்பிலும் ஆராயும் கலந்துரையாடல் ஒன்று சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம். மாஹீருக்கும், இலங்கை அடிப்படைமனித உரிமைகள் அமைப்பினருக்குமிடையில் சம்மாந்துறை பிரதேச சபை கட்டிடத்தில் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில் இலங்கை அடிப்படை மனித உரிமைகள் அமைப்பின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஈ.எம்.பி. டேனியல், கிழக்கு மாகாண பணிப்பாளர் எம். நளீர் அபூபக்கர், அம்பாறை மாவட்ட பணிப்பாளர் எஸ். அரூண் உட்பட பலரும் கலந்துகொண்டு சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம். மாஹீருடன் யானைகளின் பாதிப்புகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடினர்.
கருத்துக்களேதுமில்லை