யா/ மீசாலை விக்கினேஸ்வர மகா வித்தியாலய மாணவர்களுக்கான கல்வி ஊக்குவிப்பு நிகழ்வு!
யா/ மீசாலை விக்கினேஸ்வர மகா வித்தியாலய மாணவர்களுக்கான கல்வி ஊக்குவிப்பு நிகழ்வு இன்று(13) இடம்பெற்றது.
இதன்போது பிரான்ஸ் – பழைய மாணவர் ஆசிரியர் சங்கத்தால், உயர்தரத்தில் கல்வி பயிலும் கல்வி ஊக்குவிப்பு தேவையுடைய 5 மாணவர்களுக்கான ஊக்குவிப்புத் தொகை வழங்கி வைக்கப்பட்டது.
மாதாந்தம் மூவாயிரம் ரூபா வீதம் மாணவர் ஒருவருக்கு தலா 72 ஆயிரம் ரூபா வீதம் வழங்கப்படவுள்ளது.
இந்த மாணவர்கள் உயர்தரத்தில் கல்வி பயிலும் 2 ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக இந்த ஊக்குவிப்பு தொகை மாதாந்தம் வழங்கப்படவுள்ளது.
இந்த நிகழ்வில் பாடசாலையின் அதிபர் சுதாமதி தயாபரன், உப அதிபர் கோடீஸ்வரன், பழைய மாணவர் சங்க செயலாளர் க.ரஜனிகாந்தன் ஆகியோர் கலந்து கொண்டு ஊக்குவிப்புத் தொகையை வழங்கி வைத்தனர்.
கருத்துக்களேதுமில்லை