தொழிற்சங்க போராட்டங்களில் பொது மக்களும் இணைய வேண்டும்

வரி அதிகரிப்பு, நீர், மின் கட்டண அதிகரிப்பு போன்ற அரச பயங்கர வாதத்த்திற்கு எதிராக முன்னெடுக்கப் படும் அனைத்து தொழிற் சங்கங்க நடவடிக்கைகளுக்கும் நாட்டு மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.எம். மஹ்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று(13)  வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு  கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. தொடர்ந்தும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
திராணியற்ற நிருவாகம், ஊழல், மோசடி போன்றவற்றால் நாட்டையும் நாட்டுமக்களையும் நாசம் செய்து பொருளாதாரத்தையும் அதள பாதாளத்தில் தள்ளிய மோசடிக் காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து நாட்டை மீட்பதற்கு பதிலாக நாட்டு மக்கள் மீது வரிகளை சுமத்தி நீர், மின் கட்டணங்களோடு விலைகளையும் அதிகரித்து விளையாடுகின்றது இந்த அரசு.
ஆட்சியாளர்களும், அமைச்சர்களும் செய்த குற்றங்களுக்காக நாட்டு மக்களுக்கு தண்டனை வழங்குவதில் என்ன நியாயம் இருக்கின்றது?
எனவே இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் பாதாளத்திற்குள் தள்ளிய இந்த அராஜக அரசுக்கு எதிராக அரங்கேறும் அனைத்து தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கும் நாமும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவ் அறிக்கையினூடாக மேலும்  கேட்டுக் கொண்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.