பாடசாலையின் அடுத்த தவணையில் இரட்டிப்பாகவுள்ள வேலைத்திட்டம்

பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவு வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தை இரட்டிப்பாக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில் –

தற்போது பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவு வழங்கும் தேசிய வேலைத்திட்டம் அடுத்த பாடசாலை தவணை ஆரம்பத்திலிருந்து இரட்டிப்பாக்கப்படும்.

அமைச்சகம் தற்போது 11 லட்சம் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவை வழங்கி வருகிறது.

இந்த திட்டம், அமெரிக்க எய்ட் நிறுவனம், உலக உணவுத் திட்டம் மற்றும் அரசாங்கத்தின் ஆதரவுடன் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டது.

மேலும் குறித்த மதிய உணவு வழங்கும் தேசிய வேலைத்திட்டம் அடுத்த பாடசாலை தவணை ஆரம்பத்திலிருந்து இரட்டிப்பாக்கப்படும். – எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.