அரச வருமானம் அதிகரிக்கும் பட்சத்தில் மானியங்கள் வழங்கப்படும் – அரசாங்கம்

வரி சீர்திருத்தங்களினால் அரச வருமானம் அதிகரிக்கும் பட்சத்தில் மேலும் மானியங்களை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், அரச ஊழியர்களில் நூற்றுக்கு 10 வீதமானவர்கள் மாத்திரமே புதிய வரிசீர்த்திருத்தத்திற்கு உள்வாங்கப்படுவதாக குறிப்பிட்டார்.

புதிய வரிச்சீர்த்திருத்தத்தில் அரசாங்கத்திற்கு வருமானம் அதிகரித்தால், அனைத்து அரச ஊழியர்களுக்கும் மானியம் வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.