மடகஸ்காரில் கோர விபத்தில் சிக்கி இலங்கையர் பலி! இருவர் வைத்தியசாலையில்

மடகஸ்காரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இரு இலங்கையர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தில் பேருவளையைச் சேர்ந்த இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவரே உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் காயமடைந்த இருவரும் தற்போது அந்நாட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனத் தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.