19 வயதான யுவதி பாலியல் துஸ்பிரயோகம் : அநுராதபுரத்தில் இரு இளைஞர்கள் கைது!

19 வயதான யுவதி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

அநுராதபுரம் நகர எல்லையில் வசிக்கும் 22 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பதுளை பிரதேசத்திலிருந்து அறுராதபுரத்துக்கு வந்த குறித்த யுவதி, வாடகை வீட்டில் தங்கியிருந்து உணவகம் ஒன்றில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, ஒரு தினத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், மோட்டார் சைக்கிளில் அவரை ஏற்றிச் சென்று பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.