முல்லைத்தீவு அரச சார்பற்ற நிறுவனங்களின் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் இயங்கி வரும் அரச சார்பற்ற நிறுவனங்களின் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டமானது நடப்பாண்டின் காலாண்டுக்கான கூட்டமாக அமைந்துள்ளது.

இதன்போது அரச சார்பற்ற நிறுவனங்களால் தற்போது முன்னெடுக்கப்படும் திட்டங்கள், எதிர்கால திட்டங்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டன.

அத்துடன் வீட்டுத்திட்டம், குடிநீர், வாழ்வாதாரம், உலருணவு, கல்விக்கான உதவி, சுயதொழில் ஊக்குவிப்பு, சமூக விழிப்புணர்வு, தொழில் வழிகாட்டல், கிராமிய அத்தியாவசிய உட்கட்டுமானத் தேவைகள் குறித்தும் பேசப்பட்டன.

குறிப்பாக, தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்களின் அன்றாட வாழ்வியலில் பல்வேறு மாற்றங்களை அவதானிக்க முடிகிறது எனவும், அதற்கேற்றாற்போல் அரச சார்பற்ற நிறுவனங்கள் தங்கள் உதவித் திட்டங்களை வழங்க முன்வருகின்றமை சிறந்ததாக அமையும் எனவும் மாவட்ட அரசாங்க அதிபர் தனது கருத்தினை முன்வைத்தார்.

இக்கூட்டத்தில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.கனகேஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. ம.கி. வில்வராஜா, உலக உணவுத்திட்டத்தின் மாவட்ட அலுவலகர் திருமதி. ஜெயபவாணி, மாவட்ட உதவித்திட்டமிடல் பணிப்பாளர், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர், மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர், பிரதேச செயலகங்களின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், முல்லை வலயக்கல்வி பணிப்பாளர், துணுக்காய் வலயக்கல்விப் பணிப்பாளர், முல்லைத்தீவு மாவட்டத்தில் இயங்கிவரும் அரச சார்பற்ற நிறுவனங்களின் திட்டப் பணிப்பாளர்கள், அதிகாரிகள், பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.