வீரபுர பிரதேச காட்டில் 12 வயது மாணவியுடன் இருந்த 32 வயது நபர் கைது!

வீரபுர பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதியில் 12 வயதுடைய பாடசாலை மாணவியொருவருடன் இருந்த 32 வயதுடைய நபரொருவர் சந்தேகத்தின் பேரில் சாலியவெவ பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபருடன் இருந்த சிறுமியான மாணவியும் பொலிஸாரின் பொறுப்பில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

வீரபுர பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்குச் சென்ற நபர் ஒருவர் இவர்கள் இருவரையும் காட்டுப் பகுதியில் கண்டு பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே பொலிஸார் குறித்த இடத்துக்கு சென்றுள்ளனர்.

இதன்போது கைதுசெய்யப்பட்டவர் கிரிபாவ பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் ஆவார்.

அத்துடன் குறித்த மாணவி ராஜாங்கனை பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.