யாழில் வறுமையில் சிக்கித் தவிக்கும் 1814 கர்ப்பிணிகள் -கோப்பாய் பிரதேச செயலகம் முன்னிலை

யாழ். மாவட்டத்தில் 1814 கர்ப்பிணிகள் வறுமை நிலையில் உள்ளதாக யாழ்.மாவட்ட செயலக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் ஏற்பட்ட கொரோனா இடர் காலத்துக்குப் பின்னர் ஏற்பட்ட பொருளாதார நிலைமை காரணமாக பல கர்ப்பிணிப் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் கோப்பாய் பிரதேச செயலகப் பிரிவில் 370 கர்ப்பிணிகள் உள்ளனர். பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் 226 கர்ப்பிணிப் பெண்களும், தெல்லிப்பளை பிரதேச செயலகப் பிரிவில் 139 கர்ப்பிணிகளும், யாழ்ப்பாண பிரதேச செயலகப் பிரிவில் 138 கர்ப்பிணிகளும்,கரவெட்டி பிரதேச செயலகப் பிரிவில் 128 கர்ப்பிணிகளும் சாவகச்சேரி பிரதேச செயலகப் பிரிவில் 118 கர்ப்பிணிகளும் உள்ளனர்.

அதேபோன்று உடுவில் பிரதேச செயலகப் பிரிவில் 117 கர்ப்பிணிகளும், மருதங்கேணி பிரதேச செயலகப் பிரிவில் 98 கர்ப்பிணிகளும், சண்டிலிப்பாய் பிரதேச செயலகப் பிரிவில் 97 கர்ப்பிணிகளும், நல்லூர் பிரதேச செயலகப் பிரிவில் 91 கர்பிணிகளும் , காரைநகர் பிரதேச செயலகப் பிரிவில் 40 கர்ப்பிணிகளும் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர்.

மேலும் வேலணை பிரதேச செயலகப் பிரிவில் 49 கர்ப்பிணிகளும் ஊர்காவற்றுறை பிரதேச செயலகப் பிரிவில் 25 கர்ப்பிணிகளும் ,நெடுந்தீவு பிரதேச செயலகப் பிரிவில் 21 கர்ப்பிணிகளும் ஆக 1814 பேர் வறுமை நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதே நேரம் அரசாங்கத்தினால் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் 2ஆயிரம் ரூபா கொடுப்பனவு 8 மாதங்களுக்கு மேலாக வழங்கப்படாமல் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.