உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட ஜனாதிபதியை வலியுறுத்தவில்லை – பொதுஜன பெரமுன

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் வலியுறுத்தவில்லை. தேர்தலை விரைவாக நடத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளோம்.

உள்ளூராட்சி மன்றங்கள் அரச அதிகாரிகளால் நிர்வகிக்கப்படுவது ஜனநாயகத்துக்கு முரணானது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் ,டம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –

உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து உள்ளூராட்சி மன்ற நிர்வாகம் மாநகர சபை ஆணையாளர்களிடமும், பிரதேச சபை செயலாளர்களிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளதால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

உள்ளூராட்சி மன்ற நிர்வாகம் மக்கள் பிரதிநிதிகள் அல்லாத தரப்பினரால் முன்னெடுக்கப்படுவது ஜனநாயகத்துக்கு முரணானது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுமாறு ஜனாதிபதியிடம் பொதுஜன பெரமுன ஒருபோதும் வலியுறுத்தவில்லை.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வெகுவிரைவாக நடத்தப்பட வேண்டும் என ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம். கட்சி என்ற ரீதியில் தேர்தலுக்குத் தயாராக உள்ளோம். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய் என்பதை நாட்டு மக்கள் அறிந்து கொண்டுள்ளார்கள்.

தேர்தல் ,டம்பெற்றால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றிபெறும். தேர்தலைப் பிற்போடும் நோக்கம் எமக்குக் கிடையாது. யாருக்கு ஆட்சியதிகாரத்தை ஒப்படைக்க வேண்டும் என்பதை நாட்டு மக்கள் தீர்மானிப்பார்கள். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.