புதையல் தோண்டுவதற்கு முயன்ற மூவர் கைது

மஹியங்கனை, திவுலபெலஸ்ஸ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் புதையல் தோண்டுவதற்கு முயன்ற மூவர் நேற்று (21) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக திவுல பெலஸ்ஸ, தல்தெனியாய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் புதையல் தோண்டுவதற்கு முயற்சித்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 44, 55 மற்றும் 63 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் தல்தெனியாய மற்றும் கிராந்துருவன் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தபடும் உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் திவுல பெலஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.