கீரிமலை நகுலேஸ்வர ஆலயத்தின் பெரும் தொகை பணம் குருக்கள் வீட்டில் இருந்து திருட்டு

யாழ்ப்பாணம் கீரிமலை நகுலேஸ்வர ஆலய பணம் சுமார் 30 லட்சம் ரூபா ஆலய குருக்கள் வீட்டில் இருந்து திருடப்பட்டுள்ளது.

ஆலய பணத்தை குருக்கள் வீட்டில் பாதுகாப்பாக வைத்திருந்த வேளை குருக்கள் மருத்துவ சிகிச்சைக்காக அண்மையில் கொழுப்பு சென்றுள்ளார்.

அந்நேரத்தில் வீட்டின் கூரையை பிரித்து உள் இறங்கிய கும்பல் ஒன்று குருக்கள் வீட்டில் இருந்த பணத்தை திருடி சென்றுள்ளது.

குருக்கள் கொழும்பில் இருந்து நேற்று (புதன்கிழமை) வீடு திரும்பிய போதே வீட்டின் கூரை பிரித்து வீட்டில் இருந்த ஆலய பணம் திருடப்பட்ட விடயத்தை அறிந்துள்ளார்.

அது தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.