வாசல் கவிதை சஞ்சிகை திருமலையில் வெளியீடு!

வாசல் வாசகர் வட்டத்தின் வெளியீடான வாசல் கவிதை சஞ்சிகை கடந்த வியாழக்கிழமை திருகோணமலை நகராட்சி மன்ற பொது நூலக கேட்போர் கூடத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

இந்நிகழ்வு, வாசல் வாசகர் வட்டத்தின் தலைவர் ஊடகவியலாளர் அரசரெத்தினம் அச்சுதனின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு, ஆசியுரையை திருகோணமலை ஸ்ரீபத்திரகாளி அம்பாள் தேவஸ்தானத்தின் பிரதம குரு சோ.இரவிச்சந்திர குருக்கள் வழங்கியதுடன் சஞ்சிகையின் முதல் பிரதியையும் பெற்றுக்கொண்டார் , பிரதம விருந்தினராக திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் சூ.பார்த்தீபன் கலந்து கொண்டதுடன், சிறப்பு விருந்தினராக தமிழ்நாட்டின் நந்தவனம் சஞ்சிகையின் ஆசிரியர் நந்தவனம் சந்திரசேகரன், கௌரவ விருந்தினராக மூத்த கவிஞர் அம்.கௌரிதாசன், வாசல் சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் ச.திருச்செந்தூரன், கவிஞர் க .யோகானந்தம், தமிழகத்தின் முன்னணி எழுத்தாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.