அரசமைப்புப் பேரவையில் சித்தார்த்தனை இணைக்க மறுப்பது தவறான சமிக்ஞையே! சஜித் எச்சரிக்கை

சித்தார்த்தனை அரசமைப்பு பேரவையில் இணைத்துக் கொள்ள மறுப்பது தவறான சமிக்ஞையை அனுப்பும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தர்மலிங்கம் சித்தார்த்தனை அரசமைப்பு சபையில் இணைத்துக்கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரிந்துரை செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசமைப்பு பேரவையில் தற்போது 9 உறுப்பினர்கள் மாத்திரமே உள்ளனர் எனவும், எனினும் அதற்கு 10 பேர் தேவை எனவும் பிரேமதாஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.