தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த இலங்கை விமானப்படை அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கான பாராட்டு வைபவம்

லங்கை விமானப்படை அங்கத்தவர்களின் பிள்ளைகளான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் வகையில் சேவா வனிதா பிரிவினால் விமானப்படை தலைமையகத்தில் நேற்று (30) பரிசளிப்பு வைபவம் இடம்பெற்றது.

இந்நிகழ்வு இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. சார்மினி பத்திரனவின் வழிகாட்டலின் கீழ், விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரனவின் பங்கேற்பில் நடைபெற்றது.

இதன்போது இலங்கை விமானப்படையின் சேவை மற்றும் சிவில் அங்கத்தவர்களின் பிள்ளைகளான கடந்த வருடம் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 339 மாணவர்களுக்கு விமானப்படை தளபதியினால் பரிசில்கள் வழங்கப்பட்டன.

அத்தோடு இலங்கை விமானப்படை தளபதி மற்றும் இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி ஆகியோரால் இந்த நிகழ்வில் பங்குபற்றிய மாணவ, மாணவிகளுக்கு  அவர்களின் எதிர்கால கல்வி நடவடிக்கைகள் சிறப்பாக அமைய வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.