உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் – அரசமருத்துவஅதிகாரிகள் சங்கமும் எதிர்ப்பு

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து தொழிற்சங்கங்கள் இன்று ஆராயவுள்ளன.

சிவில் சமூகத்தினர் தொழிற்சங்கங்கள் உட்பட பல அமைப்புகள் உத்தேச பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து கரிசனை வெளியிட்டுள்ள நிலையிலேயே தொழிற்சங்கங்கள் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து இன்று ஆராயவுள்ளன.

இலங்கை அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் இந்த கலந்துரையாடலில் கலந்துகொள்ளும் என அதன் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

உத்தேச பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து ஆராய்வதற்காக அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் மூவர் கொண்ட குழுவை நியமித்துள்ளதாக தெரிவித்துள்ள அதன் பேச்சாளர் அந்த குழுவின் பரிந்துரைகளை அடிப்படையாக வைத்து உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய சட்டமூலம் மற்றும் அதன் நியாயபூர்வ தன்மை குறித்து ஆராய்வதற்காக மூவர் கொண்ட குழுவை நியமித்துள்ளோம் என தெரிவித்துள்ள அவர் உத்தேச சட்டமூலம் குறித்த எங்கள் அதிருப்தியை சுட்டிக்காட்டி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.