கொழும்பு துறைமுகத்தில் நின்ற பனாமா நாட்டுக் கப்பலுக்குள் நுழைந்த யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த நால்வர் கைது!

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த பனாமா நாட்டுக்குச் சொந்தமான கப்பல் ஒன்றுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்ல முயன்ற நால்வர் கப்பல் ஊழியர்களால் அடையாளம் காணப்பட்டதையடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் வேலணை, தொண்டமனாறு, புதுக்குடியிருப்பு மற்றும் அராலி வடக்கு ஆகிய பகுதிகளில் வசிக்கும் 21, 22 மற்றும் 35 வயதுடைய நால்வரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்காக துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.