திருத்தப்பணிகள் இடம்பெறும் குமுதினிப் படகை பார்வையிட்டார் சிறிதரன்

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் குமுதினி படகினை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் சென்று  பார்வையிட்டுள்ளார்.

நெடுந்தீவுக்கான பயணிகள் போக்கு வரத்துச் சேவையில் ஈடுபட்டு வந்த குமுதினிப் படகு பழுதடைந்த நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக  மாவிலித்துறையில் தரித்திருந்ததுடன் திருத்தப்பணிகளுக்காக வல்வெட்டித்துறைக்கு கொண்டு செல்லப்பட்டு நீண்ட காலமாக திருத்த பணிகள் முன்னெடுக்கப்ட்டு வருகினிறன.

அதாவது வீதிஅபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான குமுதினி படகு மற்றும் வட தாரகை படகு என்பன நெடுந்தீவுக்கான பயணிகள் போக்கு வரத்து சேவையில் ஈடுபட்டு வந்த நிலையில் குமுதினி படகு பழுதடைந்தடைந்ததையடுத்து வடதாரகை படகு மாத்திரமே சேவையில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் நெடுந்தீவுக்கான போக்கு வரத்தில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றனர்.

இன் நிலையில் திருத்த பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் குமுதினி படகின் திருத்தப்பணிகளை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நெடுந்தீவைச் சேர்ந்த ஓய்வு நிலை அதிபர் வரதன் நெடுந்தீவைச் சேர்ந்த  கட்சியின் செயற்பாட்டாளர்கள் சென்று பார்வையிட்டு அதன் நிலமைகள் தொடர்பில் கேட்டறிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.