திருகோணமலையில் தமிழ், முஸ்லிம் பகுதிகள் ஹர்த்தாலால் முடங்கின !

பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம்,  சிங்களமயமாக்கலை எதிர்த்து வடக்கு, கிழக்கில் இன்று செவ்வாய்க்கிழமை (25) பூரண ஹர்த்தால் இடம் பெறுகின்றது.

திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்,  முஸ்லிம் மக்கள் ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் அந்தப் பகுதிகளில் அனைத்து துறைகளும் இன்று முடங்கியுள்ளன.

திருகோணமலையில் தமிழ்,  முஸ்லிம் மக்களின் வர்த்தக நிலையங்கள், கடைகள் பூட்டப்பட்டு காணப்படுகின்றன.

பாடசாலைகளுக்கு மாணவர்கள் வருகைதரவில்லை. இதனால் பாடசாலைகள் இயங்கவில்லை. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து காணப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்