விமலின் கருத்து அடிப்படையற்றது! மறுக்கிறது பாதுகாப்பு அமைச்சு

நாட்டில் கடந்த ஆண்டு இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது ஜனாதிபதி மாளிக்கைக்குள் படைத்தளபதிகள் மற்றும் ஜனாதிபதி உள்ளிட்டோர் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்படவிருந்ததாகவும், அந்த சந்தர்ப்பத்தில் முன்னாள் இராணுவத்தளபதி இந்தியாவுக்கு சென்றிருந்தமை சந்தேகத்தை தோற்றுவிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ள கருத்தைப் பாதுகாப்பு அமைச்சு மறுத்துள்ளது.

இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் –

கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் பக்க நிகழ்வாக தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் கடந்த ஆண்டு ஜூலை 7 ஆம் திகதி இந்தியாவில் இடம்பெற்றது.

நாட்டின் அப்போதைய ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனை மற்றும் அனுமதியின் கீழ் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாதுகாப்பு பதவி நிலை தலைமை அதிகாரி, முன்னாள் விமானப்படைத் தளபதி சவேந்திர சில்வா குறித்த மாநாட்டில் பங்குபற்றியிருந்தார்.

இந்நிலையில் நூல் வெளியீட்டு விழாவொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ, ‘2022 மே 9ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்தவர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் ஜனாதிபதி மற்றும் படைத்தளபதிகள் மீது தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிட்டதாகவும், அந்த சந்தர்ப்பத்தில் சவேந்திர சில்வா இந்தியா சென்றிருந்தமை சந்தேகத்தை ஏற்படுத்தியது.’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ள கருத்து அடிப்படையற்றதாகும். பாதுகாப்பு பதவி நிலை தலைமை அதிகாரி , முன்னாள் விமானப்படைத் தளபதியுமான சவேந்திர சில்வா கொழும்பு பாதுகாப்பு மாநாட்டில் பங்குபற்றுவதற்காக கடந்த ஆண்டு ஜூலை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தது அப்போதைய ஜனாதிபதியின் ஆலோசனைக்கமையவே என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம். – என்றுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.