சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கு போதையூட்டக்கூடிய வகையில் செயற்படுகின்றார்கள்!  டக்ளஸ் தேவானந்தா சாடல்

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மக்களுக்கு போதையூட்டக்கூடிய வகையில் கருத்துக்களை வெளியிடுகின்றனர் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்று (வெள்ளிக்கிழமை) வேலனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பெரும் போகத்தில் அரசாங்கத்தின் நெல் கொள்வனவு நிகழ்ச்சித் திட்டம் மற்றும் இராணுவத்தின் மேலதிக பங்களிப்புடன் வறிய குடும்பங்களுக்கான இலவச அரிசிப்பொதி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு –

வறிய மக்களுக்கு உதவும் முகமாக நாடு முழுவதும் 20 லட்சம் குடும்பங்களைத் தெரிவு செய்து ஒரு குடும்பத்துக்கும் தலா 10 கிலோ எடையுடைய அரிசி வீதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாரபட்சமற்ற விதத்தில் ஜனாதிபதி இந்த  முடிவை எடுத்துள்ளார். இந்த முடிவை எடுத்தது கிளிநொச்சி  விவசாயிகளோடு ஜனாதிபதி களத்தில் சந்தித்தபோது நெல்லுக்கான உத்தரவாத விலையை நூறு ரூபாவாக அறிவித்து இந்த திட்டத்தையும் அவர் அதில் அறிவித்திருந்தார்.

அந்த வகையில் பாரபட்சமற்ற வகையில் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுத்து வருகின்றார். வட மாகாணத்தை ப் பொறுத்தவரையில் இலங்கையினுடைய ஏனைய மாவட்டங்களைவிட சிறப்பாக முன்னெடுக்கப்படுகின்றது. இந்தத் திட்டம் சிறப்பாக நடைபெறுகின்றது. அந்த வகையில் சம்பந்தப்பட்ட அரசாங்க அதிபர்களுக்கு இந்த சந்தர்ப்பத்தில் நன்றி கூறக் கடமைப்பட்டு இருக்கின்றேன்.

இந்த பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன.  அதாவது ஒரு தேவையற்ற யுத்தம் காரணமாக விசேடமான பிரச்சினைகள் எதிர்கொள்ளப்பட்டன.

இந்த பிரச்சினைகளில் இருந்து விடுபட்டுள்ள போதிலும் எங்கள் மக்கள் தற்போது நாடு தழுவிய ரீதியில் பொருளாதார ரீதியான பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துவருகின்றார்கள்.

அந்த வகையில் இந்த நாடு கடந்த காலத்தில் தேவையற்ற  யுத்தம் காரணமாக  கொரோனா தொற்று காரணமாக நிதி மற்றும் பொருளாதாரம் தொடர்பாக ஆட்சியில் இருந்த தலைவர்களிடம் முறையான முகாமைத்துவம் இல்லாததுமை காரணமாக எங்களுடைய நாடு பொருளாதார ரீதியில் அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டது.

அந்த நேரத்தில் இந்த நாட்டுக்கு தலைமை தாங்கக்கூடிய பாதிப்பில் இருந்து மக்களை மீட்கக்கூடிய முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய வகையில் யாரும் இருக்கவில்லை. எல்லோரும் பின்னடித்த நேரத்தில் எங்களுடைய  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்வந்தமைக்காக மக்களின் சார்பில் நான் அவருக்கு பாராட்டை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்

நாட்டுத் தலைவர்களுக்குள் மாண்புமிகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தான் இந்த இக்கட்டான நிலைமையில் இருந்து எங்களை முன் கொண்டு செல்லக்கூடிய ஒரு தலைவர் – தியாகி – இருக்கின்றபடியால் நாங்கள் அவரோடு நம்பிக்கையோடு பயணிக்கலாம் என்பதையும் நான் இந்த சந்தர்ப்பத்தில் உங்களுக்கு தெளிவுபடுத்த – வலியுறுத்த – விரும்புகின்றேன்.

நாடாளுமன்றத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கட்டைக்காடில் இருநூறு ஏக்கர் சீனாவுக்கும் கிளிநொச்சியில் 800 ஏக்கள் வெளிநாடுகளுக்கு கொடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று தெரிவித்தார்.

அதில் எந்தவிதமான உண்மை இல்லை.  நமது அரசாங்கத்தில் அவ்வாறு திட்டமும் இல்லை. எந்தவிதமான அடிப்படையும் இல்லாமல் அவ்வாறான பொய்யை நாடாளுமன்ற உறுப்பினர் சிறினிகள் போன்ற சில தமிழ் உறுப்பினர்கள் சாணியல் போன்ற சில உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திலே இப்படியான உரைகளை முன்னெடுப்பதன்  ஊடாக சாணி சிறினி போன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் பொய் கூறி மக்களைத் தவறாக வழிநடத்துகின்றனர்.

வாக்குகளை அபகரிக்கக் கூடிய வகையில் கருத்துக்களை வைத்து வருகின்றார்கள். ஆனபடியால் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். போதை வஸ்து பற்றி பேசுகின்றோம் இவர்களுடைய இந்த கருத்துக்களும் மக்களுக்கு ஒரு போதை ஊட்டக்கூடிய வகையில் தான் அமைந்திருக்கின்றன.

அதனால் விழிப்பாக இருக்க வேண்டும் என நான் தெரிவித்துக் கொள்கின்றேன். பொய்களை கூறி மக்களிடமிருந்து வாக்குகளை அபகரிப்பதற்காக அவர்கள் பொய்யான விடயங்களை பேசுகின்றார்கள் என்பதை  மக்கள் மிகவும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.