யாழ்ப்பாணம் வல்லை முனியப்பர் ஆலயத்திற்கு முன் சடலம் மீட்பு! 

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லை முனியப்பர் ஆலயத்துக்கு முன்பாக உள்ள பழக்கடையில் வேலை செய்து வந்த இளைஞன் பழக்கடைக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை)  சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .

சடலம் காணப்படும் நிலை சந்தேகத்துக்கு இடமான முறையில் உள்ளமையால் , கொலையா ? தற்கொலையா ? என பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

விசாரணைகளின் பின்னர் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.