இலங்கை பணிப் பெண் சந்தேகத்துக்கிடமான முறையில் குவைத்தில் மரணம்: விசாரணைகள் முன்னெடுப்பு!

குவைத்தில் பணி புரிந்து வந்த இலங்கைப் பெண் ஒருவர் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில் குவைத்துக்கான இலங்கை தூதுவர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஆராய்வதற்காக தூதுவருடன் தொலைபேசி ஊடாக உரையாடியதாகவும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஏழு வருடங்களாக வெளிநாட்டில் பணிபுரிந்த பெண் தற்கொலை செய்திருக்க முடியாது என அந்த நபரின் குடும்பத்தினர் எழுப்பிய கேள்விகள், கவலையையும் இராஜாங்க அமைச்சர் முன்வைத்தார்.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என இராஜாங்க அமைச்சரிடம் தெரிவித்த இலங்கைத் தூதுவர், இது தொடர்பான விரிவான அறிக்கை தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.