மதவாச்சி றஷீத் பின் அப்தில்லாஹ் அரபு கல்லூரியின் பட்டமளிப்பு விழா!

அநுராதபுரம், மதவாச்சி றஷீத் பின் அப்தில்லாஹ் அரபுக் கல்லூரியின் அல்-ஆலீம்களுக்கான 02 ஆவது பட்டமளிப்பு விழா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மதவாச்சி, முகையதீன் ஜும்ஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.

அரபுக் கல்லூரியின் தலைவர் அல்-ஹாஜ் சஹாப்தீன் மற்றும் அதிபர் அஷ்-ஷெய்ஹ் பாயிஸ் (றஷாதி) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் கலந்துகொண்டதுடன், விசேட பேச்சாளராக ஜம்இய்யத்துல் உலமா சபையின் பத்வா குழு உறுப்பினர் யஹ்யா (பலாஹி) சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில், கல்லூரியின் உபதலைவர் கலீலுல் ரஹ்மான் உள்ளிட்ட பல உலமாக்களும் புத்திஜீவிகளும் கலந்துகொண்டனர்.

இதன்போது, 15 மாணவர்களுக்கு ‘அல்-ஆலிம்’ பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.