ஊடகவியலாளர்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன! நீதிக்கான மையத்தின் ஏற்பாட்டில்

நூருல் ஹூதா உமர்

நீதிக்கான மையத்தால் ஊடகவியலாளர்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு மையத்தின் சாய்ந்தமருது காரியாலயத்தில் கடந்த புதன்கிழமை இடம்பெற்றது. சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ.மஜீத் விடுத்த வேண்டுகோளை ஏற்று நீதிக்கான மையத்தால் இந்த கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

நீதிக்கான மையத்தின் தலைவர் சட்டத்தரணி ஷஃபி எச்.இஸ்மாயில் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நீதிக்கான மையத்தின் பிரதித் தலைவர் யூ.கே.எம்.றிம்சான், பொருளாளர் ஏ.ஏ.அஷ்ரஃப் அலி, சட்டத்தரணி எம்.ஷிபான், சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ.மஜீத், பொதுச் செயலாளர் ஏ.எல்.எம்.முஜாஹித், பொருளாளர் நூருல் ஹூதா உமர், பிரதித் தலைவர் எஸ்.அஷ்ரஃப்கான், பிரதிச் செயலாளர் எம்.எம்.ஜபீர் செயற்குழு உறுப்பினர்களான எம்.வை. அமீர், எஸ்.ஜனூஸ் உள்ளிட்ட ஊடகவியலாளர்களான அஸ்லம் எஸ்.மௌலானா, பாறூக் ஷிஹான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நீதிக்கான மையத்தால் கடந்த காலங்களில் தெரிவு செய்யப்பட்ட தமிழ், முஸ்லிம் பாடசாலை மாணவர்களுக்கு ‘மகிழும் இதயம்’ திட்டத்தினூடாக கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.