அரச ஊழியர்களால் நாட்டுக்கும் மக்களுக்கும் உண்மையான நன்மைகள் ஏதும் கிடைக்குமா?  ரவி கருணாநாயக்க கேள்வி

நாட்டில் 17 லட்சம் அரச ஊழியர்கள் உள்ளனர் எனவும்இ வரி செலுத்துவோரின் மொத்த வருமானத்தில் 76வீதம் இந்த 17 லட்சம் பேரை பராமரிப்பதற்கே செலவிடப்படுவதாக முன்னாள் நிதி அமைச்சரான ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு –

17 லட்சம் அரச ஊழியர்களை பராமரிப்பதற்காக வருடாந்தம் செலவிடப்படும் 1.4 லட்சம் கோடி ரூபாவுடன் ஒப்பிடுகையில்இ அவர்களால் நாட்டுக்கும் மக்களுக்கும் உண்மையான நன்மை கிடைக்குமா என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

ஒரு வருடத்தில் 104 ரில்லியன் ரூபா செலவாகும் என்றும்இ இலங்கை மின்சார சபைஇ பெற்றோலியக் கூட்டுத்தாபனம்இ இலங்கை விமானம் மற்றும் வலையமைப்புக் கொள்வனவுச் சபை என்பன கடந்த நான்கு வருடங்களில் 1350 பில்லியன் ரூபா நட்டத்தைச் சந்தித்துள்ளன எனவும் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த பணத்தை சேமித்திருந்தால் 12 லட்சம் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் எனவும்இ நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் 178இ000 ரூபாவை சேமித்திருப்பார்கள் எனவும் முன்னாள் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.