கடலில் மூழ்கி காணாமற் போன மாணவனின் சடலம் கண்டெடுப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் கடலில் மூழ்கி காணாமல்போன மாணவனின் சடலம் இன்று (திங்கட்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது,

இம்முறை சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை மாலை பெரியகல்லாறு கடலில் குளிக்கச்சென்ற நிலையில் காணாமல்போயிருந்தார்.

பெரியகல்லாறு,பொற்கொல்லர் வீதியை சேர்ந்த பாலச்சந்திரன் ஜெசான் என்னும் 17வயதுடைய மாணவரே இவ்வாறு காணாமல்போயிருந்தார்.

மூன்று பேர் கடலுக்கு குளிக்கச்சென்ற நிலையில் குறித்த மாணவன் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை குறித்த மாணவனின் சடலம் கரையொதுங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.