சுற்றுலா முகவர் சங்க மாநாடு இந்த முறை இலங்கையிலாம்! ஹரின் பெர்னாண்டோ கூறுகிறார்

இந்திய சுற்றுலா முகவர் சங்க மாநாட்டை இந்த வருடம் இலங்கையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜூலை மாதத்தில் இந்த மாநாட்டை  நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

குறித்த மாநாட்டில்  450 உயர்மட்ட வர்த்தக பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு நன்மை பயக்கும் வகையில்  அமையும் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.