எனது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலென்றால் ஓர் அடி கூட நான் பின்வாங்க மாட்டேன்! அமைச்சர் டிரான் அலஸ் கூறுகிறார்

தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக புலனாய்வு அமைப்புகள் மூலம் தகவல் கிடைத்துள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

இன்று (திங்கட்கிழமை) பொதுப் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

இவ்வாறான அச்சுறுத்தல்கள் வருமென்ற அறிந்தே இந்த பொறுப்பை தான் ஏற்றுக்கொண்டார் எனவும் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் போதைப்பொருள் கடத்தல், பாதாள உலக செயற்பாடுகளை ஒழிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறினார்.

எவ்வாறான மிரட்டல்கள் வந்தாலும் தான் ஓர் அடிகூட பின்னிக்கபோவதில்லை என்றும் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.