ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியதும் பொதுபயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு புதிய தலைவர்! நிதி இராஜாங்க அமைச்சர் ஷெகான் தெரிவிப்பு

ஜப்பானில் இருந்து ஜனாதிபதி நாடு திரும்பியதும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவிக்கு புதிய ஒருவரை நியமிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பான கடிதத்தை ஜனக ரத்நாயக்கவிற்கு நிதியமைச்சின் செயலாளர் அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தை ஜனக ரத்நாயக்க ஏற்றுக்கொண்டார் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து ஜனக ரத்நாயக்கவை நீக்குவதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை தெரிந்ததே

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.