நற்பிட்டிமுனையில் இரத்ததான முகாம்

( வி.ரி.சகாதேவராஜா)

நற்பிட்டிமுனை இந்து இளைஞர் மன்றத்தால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சிவசக்தி வித்யாலயத்தில் இரத்த தான முகாம் நடைபெற்றது.

கல்முனை ஆதார வைத்தியசாலையின் உதவியோடு ‘உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்’ என்ற திட்டத்தின் கீழ் இந்த இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது .

நேற்று (ஞாயிற்றுக்கிழமை( காலை 8 மணி முதல் 4 மணி வரை இந்த முகாம் இடம்பெற்றது. இந்து இளைஞர் மன்ற பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் இந்த முகாமில் கலந்து உயிர்காக்கும் உன்னத பணியில் ஈடுபட்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.