கஜேந்திரகுமார் மீதான தாக்குதல்! மகிந்தவிற்கு தெரியாதாம்..
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீதான பொலிஸாரினதும் அரச புலனாய்வுப் பிரிவினதும் தாக்குதல் தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்த்தன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
வடமராட்சி கிழக்கில் நேற்றுமுன்தினம் (02.06.2023) மாலை மக்கள் சந்திப்புக்காகச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது அரச புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர் தாக்கி இருந்தார்.
கொழும்பு ஊடகம்
கஜேந்திரகுமார் மீதான தாக்குதல்! ஜனாதிபதி ரணில் – மகிந்தவிற்கு தெரியாதாம் | Attack On Gajendrakumar Mp Ranil
அத்துடன், பொலிஸ் உடையிலிருந்த ஒருவர் துப்பாக்கியைக் காண்பித்து மிரட்டியிருந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று ஜனாதிபதி, பிரதமர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஆகியோரிடம் நேற்று மாலை கேள்வி எழுப்பியபோதே அவர்கள் மூவரும் தமக்குத் தெரியாது என்று பதிலளித்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை