ஜனாதிபதி ரணிலைச் சந்தித்தார் அதானிகுழும தலைவர் கௌதம்!
இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானியை சந்தித்துள்ளார்.
குறித்த சந்திப்பு தொடர்பில் கௌதம் அதானி தனது ருவிட்டர் பதிவில் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது, கொழும்பு துறைமுக மேற்கு முனைய அபிவிருத்தி, 500 மெகாவொட் காற்றலை மின் உற்பத்தித் திட்டம் மற்றும் பசுமை ஐதரசன் திட்டம் என்பன தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












கருத்துக்களேதுமில்லை