யாழில் பதைபதைப்பு சம்பவம் – 19 வயது பெண்ணுடன் காதல் வயப்பட்டு பெண்ணை கூட்டிச் சென்ற 55 வயது நபர் – திருமணம் செய்து வைக்குமாறு கேட்க பெண்ணின் வீட்டுக்குச் சென்ற நிலையில் தாக்கப்பட்டு கொலை

19 வயதுடைய இளம் பெண் ஒருவரை வீட்டைவிட்டு அழைத்துச் சென்று திருமணம் செய்து வைக்குமாறு கேட்ட 55 வயதுடைய ஒருவர் பெண்ணின் ஊரவர்களினால் தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

அவர் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் ஆறு பேரை சுன்னாகம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இன்று (07) உடுவில் அம்பலவாணர் வீதியில் குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது. சம்பவத்தில் உடுவில் – சங்குவேலியைச் சேர்ந்த 55 வயதுடைய மரியதாஸ் ஜெகதாஸ் என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இளம் பெண்ணுடன் வீட்டைவிட்டுச் சென்று தலைமறைவாகி இருந்துள்ளார்.

பெண்ணின் உறவினர்கள் அவர் காணாமற்போய்விட்டார் என அன்றைய தினமே சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

பெண்ணின் உறவினர்கள் இருவரையும் சேர்த்து வைப்பதாகத் தெரிவித்துள்ளனர். அதனால் குறித்த பெண்ணுடன் குறித்த பெண்ணின் வீட்டுக்கு 55 வயதுடைய நபர் சென்றுள்ளார். அதன் போது ஊரவர்கள் திரண்டு தாக்கியுள்ளனர்.

தாக்குதலினால் மூச்சடங்கிய நிலையில் காணப்பட்ட அவர் தெல்லிப்பழை ஆதார மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த சுன்னாகம் பொலிஸார் சம்பவம் இடம்பெற்ற பகுதியைச் சேர்ந்த நால்வரை இன்று பிற்பகல் கைது செய்தனர்.

மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.