விபத்தில் இளம்தம்பதியினர் பலி
அநுராதபுரம் பகுதியில் இன்று (09) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் தம்பதியினர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் அனுராதபுரம் – இராஜாங்கனைப் பிரதேசத்தில் அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இளம் தம்பதியினர் பயணித்த ஹயஸ் வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் அருகில் இருந்த மரத்துடன் மோதியே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.
இதன்போது ஹயஸ் வாகனத்தைச் செலுத்திச் சென்ற 28 வயதுடைய கணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
படுகாயமடைந்த மனைவி இராஜாங்கனை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட இடைவழியில் உயிரிழந்துள்ளார்.
இருவரினதும் சடலங்களும் இராஜாங்கனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை