21 லட்சம் ரூபா சிகரெட்டுக்களுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது!

சட்டவிரோதமாக சிகரெட்டுக்களை நாட்டுக்கு கடத்தி வந்த நபரொருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

டுபாயிலிருந்து இலங்கைக்கு வந்த விமானத்திலேயே கைதுசெய்யப்பட்ட நபர் வருகை தந்துள்ளார்.

இவரிடமிருந்து மீட்கப்பட்ட சிகரெட்டுக்களின் பெறுமதி சுமார் 21 லட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியானவை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த நபர் டுபாயிலுள்ள உணவகம் ஒன்றில் சமையல்காரராக பணியாற்றிய வந்த 38 வயதுடைய நாத்தாண்டிய பிரதேசத்தில் வசிப்பவர் ஆவார்.

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 21 ஆயிரத்து 400 சிகரெட்டுக்களை குறைத்த நபரின் பயணப் பையில் மறைந்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அதிகாரிகள் மீட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.