பிரேதங்களை ஏற்றிச் செல்ல யாழ்.போதனாவுக்கு வாகனம்! எஸ்.கே.நாதனின் அன்பளிப்பில்
எஸ்.கே நாதனால் இன்று (சனிக்கிழமை) யாழ்.போதனா வைத்தியசாலைக்கு உயிரிழந்தவர்களின் பிரேதங்களை ஏற்றும் வண்டி ஒன்று நன்கொடையாக வழங்கப்பட்டது.
ஏழை மக்கள் இறந்தவர்களின் உடலை எடுத்து செல்வதற்கு பெருந்தொகையான பணம்செலவழிக்க வேண்டிய நிலை உள்ளது.
இதனால் அவர்கள் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டு இறந்தவரின் உடலைக் கொண்டு செலவதில் பெரிதும் சிரமப்படுகின்றார்கள்.
மக்களின் இந்நிலை கண்டு வைத்தியசாலை நிர்வாகம் எஸ்.கே நாதனிடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவர் இந்த வாகனத்தை நன்கொடையாக வைத்தியசாலைக்கு வழங்கியுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை