யாழில் அதிகரித்துள்ள குற்றச்செயல்களை கட்டுப்படுத்த 10 நாள்கள் காலஅவகாசம்  வழங்கினார் அமைச்சர் டக்ளஸ்

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் மணல் கடத்தல், கால்நடைகள் கடத்தல் மற்றும் ஏனைய குற்றச் செயல்களை 10 நாள்களுக்குள் கட்டுப்படுத்துமாறு கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உத்தரவிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் வெள்ளிக்கிழமை, யாழ்குடா நாட்டில் அண்மைய நாள்களில் இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல் கடத்தல், கால்நடைகள் கடத்தல் உள்ளிட்ட ஏனைய சட்டவிரோத சம்பவங்கள் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் கடற்தொழில்  அமைச்சர் தலைமையில் இடம்பெற்றிருந்த நிலையில் குறித்த கூட்டத்தில் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர், யாழ்.மாவட்ட இராணுவ கட்டளை தளபதியின் பிரதிநிதி, பிரதேச செயலாளர்கள்,  பொலிஸ் உயர் அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.