கோட்டா காலத்தில் பூனை போலிருந்தோர் தற்போது நாய்போலக் குரைக்கின்றார்கள்! லான்சா சாட்டை அடி

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகவிருந்த வேளை பூனைகள் போல நடந்துகொண்ட நாமல்ராஜபக்ஷவும் சாகரகாரியவசமும் தற்போது நாய்கள் போலக் குரைக்கின்றனர் என பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமால் லான்ஸ தெரிவித்துள்ளார்.

சமீபத்தைய அமைச்சரவை மாற்றம் குறித்து நாமல்ராஜபக்ஷவும் சாகரகாரியவசமும் கடும் கருத்துக்களை வெளியிட்டுள்ளமை குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில் நிமால்லான்ஸ இதனைத் தெரிவித்துள்ளார்.

அமைச்;சரவை மாற்றங்களை ஜனாதிபதி உரிய முறையில் மேற்கொண்டுள்ளார் எனத் தெரிவித்துள்ள நிமால் லான்ஸவும் நாமலும் சாகரவும் அதனை எதிர்த்தால் அவர்கள் தங்களுக்கு மூளைகோளாறா எனப் பரிசோதிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாகப் பொய் தெரிவிப்பதை விட, சாகர காரியவசம் பதவியை இராஜினாமாச் செய்துவிட்டு இவ்வாறான கருத்துக்களை வெளியிடவேண்டும். அவருக்கு இதற்கான துணிச்சல் உள்ளதா என நான் சந்தேகிக்கின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையை கோட்டபாய ராஜபக்ஸ நான்கு தடவை மாற்றியவேளை நாமல் அமைதியாக இருந்தார். ஆனால் ரணில்விக்கிரமசிங்க ஒருமுறை அமைச்சரவை மாற்றத்தை மேற்கொண்டவுடன் நாமல் தனது வழமையான சண்டியன் பாணியில் பேசுகின்றார் எனவும் நிமால் லான்ஸ தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.