வழிப்பறிக் கொள்ளையனை துரத்தி தாக்கிய இளம்தாய்! மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு ஓட்டம்

தனது சங்கிலியை அறுத்த வழிப்பறி கொள்ளையர்களை இளம் தாய் ஒருவர் துரத்திய போது , கொள்ளையர்கள் தமது மோட்டார் சைக்கிளை கைவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

யாழ்ப்பாணம் – கொடிகாமம் பகுதியை சேர்ந்த இளம் தாய் ஒருவர்  வியாழக்கிழமை மதியம் தனது பிள்ளையை முன்பள்ளியில் இருந்து ஏற்றிக்கொண்டு வீடு திரும்பிய போது , ஆள்நடமாற்றம் அற்ற பகுதியில் மோட்டார் சைக்கிள் நின்ற இருவர் , அவரை மறித்து . நபர் ஒருவரின் பெயரை கூறி வினாவியுள்ளனர்.

அவரை தனக்கு தெரியாது என கூறி செல்ல முற்பட்ட வேளை அவரது முக்கால் பவுண் சங்கிலியை அறுத்துக்கொண்டு , பிள்ளையுடன் மோட்டார் சைக்கிளை தள்ளி விட்டு, தமது மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுள்ளனர்.

உடனே சுதாகரித்துக்கொண்ட இளம் தாய் , தனது மோட்டார் சைக்கிளில் சத்தமிட்டவாறு கொள்ளையர்களை துரத்தி சென்ற போது , வீதியில் பயணித்தவர்கள் கொள்ளையர்களை மடக்கி பிடிக்க முற்பட்ட வேளை கொள்ளையர்கள் தமது மோட்டார் சைக்கிளை கைவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், கொள்ளையர்கள் கைவிட்டு சென்ற மோட்டார் சைக்கிளையும் பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.