புத்தளம் – மதுரங்குளி பகுதியில் தனியார் சொகுசு பஸ் விபத்து!

புத்தளம் மதுரங்குளி பகுதியில் மன்னாரிலிருந்து கொழும்பு சென்ற  தனியார் சொகுசு பஸ் ஒன்று  விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த பஸ் புதன்கிழமை மதியம் 12 மணியளவில் மன்னார் பஸ் தரிப்பிடத்தில் இருந்து   புறப்பட்டு கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது மதுங்குளி பகுதியில் பட்டாரக வாகனம் ஒன்றுக்கு இடம் விடும் போது  குறித்த பஸ்  குடைசாய்ந்துள்ளது.

குறித்த விபத்தில் பஸ்ஸில் பயணித்த  பயணிகள்  எவருக்கும் எந்த அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும்,  இந்த விபத்து தொடர்பாக அப்பகுதி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.