அழைப்பிதழை எதிர்பார்த்து மனோ இருக்கக் கூடாதாம்! சமாளிக்கிறார் ஜீவன்;

நாம் 200 நிகழ்வுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்; பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

பெரும்பான்மை இனத்தை சேர்ந்த எதிரணி அரசியல் தலைவர்கள் கூட நிகழ்வுக்கு வருகை தந்திருந்த நிலையில் என் சமூகத்தைச் சார்ந்த அரசியல் தலைவர்கள் வராமை கவலையளிக்கின்றது என்றும் விசனம் தெரிவித்துள்ளார்.

எமது சமூகத்துக்கான நிகழ்விற்கான அழைப்பிதழை எதிர்பார்க்கக் கூடாது இருந்தாலும் அழைப்பிதழ் அனுப்பியுள்ளோம் என மனோ கணேசனிடம் கூறியிருந்தாகவும் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.