வவுனியாவில் கோரவிபத்து: ஒருவர் உயிரிழப்பு

வவுனியாவில் துவிச்சக்கர வண்டி மீது கனரகவாகனமொன்று மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

”வவுனியா ஏ9வீதியில் இருந்து கோவில்குளம் நோக்கி சென்ற கனரகவாகனமே, இவ்வாறு துவிச்சக்கர வண்டி மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.